காவல் நிலையத்தில் வழக்கு தோஷ பூஜை
ஓமலூர்:சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் அதிக அளவில் வழக்குகள் சேர்ந்ததால் தோஷம் நீக்க சிறப்பு யாகம் நடத்தி பூஜை நடத்தப்பட்டது.
ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டம் 153 வழக்குகள் பதிவாகியுள்ளதாம். அதிலும் குற்றவியல் வழக்குகள்தான்அதிகமாம். இதனால் காவல் நிலையத்தில் தோஷம் இருக்க வேண்டும். அதனால்தான் இந்த அளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டதாகபோலீஸ் தரப்பில் பீதி ஏற்பட்டது.
இதையடுத்து ஓமலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்கள் குறையவும், காவல் நிலையத்துக்கு ஏற்பட்ட தோஷம்நீங்கவும் சிறப்பு யாகம் நடத்தி பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டது.
நேற்று இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் யாக பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குருக்கள் ஒருவரை வரவழைத்து அவரதுதலைமையில் நள்ளிரவில் யாக பூஜை நடத்தப்பட்டது. இதில் அனைத்து போலீஸாரும் கலந்து கொண்டு பய பக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
அதன் பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீரை எடுத்து காவல் நிலையத்தின் அனைத்து அறைகளிலும் குருக்கள் தெளித்தார். இந்தகாவல் நிலைய வழக்கு தோஷ யாகத்தால் ஓமலூரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்த யாக பூஜை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதா, அவர்கள் அனுமதியுடன்தான் நடந்ததா என்பது குறித்துத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications