500 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்:தமிழகத்தில் உள்ள 500 கோவில்களுக்கு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளதாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை மற்றும்தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் பேசுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன்கோவில் உள்ளிட்ட 500 கோவில்களில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும்.
ஆதி திராவிடர்கள் குடியிருக்கும் கிராமங்களில் ரூ. 5 கோடி செலவில் புதிய கோவில்கள் கட்டப்படும். பழைய கோவில்கள் புதுப்பிக்கப்படும்.
தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்காக தமிழில் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளும் நடத்தப்படும். இதில் சிறப்பிடம்பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான ஹோட்டல்களில் உள்ள ஒவ்வொரு அறையிலும் திருக்குறள் நூலை வைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ. 2.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்அவர்.












Click it and Unblock the Notifications