ஜூன் முதல் மாநகராட்சிகளில் கட்டாய ஹெல்மட்
சென்னை:தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 6 மாநகராட்சி பகுதிகளிலும் ஜூன் 1ம் தேதி முதல் ஹெல்மட் அணிவதுகட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிற பகுதிகளில் ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மட் கட்டாயமாகிறது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் கட்டாய ஹெல்மட் குறித்து விளக்கமும்கோரியிருந்தது.
இதையடுத்து இன்று தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜூன் 1ம் தேதி முதல் சென்னை,மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாநகராட்சி பகுதிகளிலும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவுஅமலுக்கு வருகிறது.
பிற பகுதிகளில் ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications