For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 இலங்கை வாலிபர்களுக்கு செளதி மரண தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

ரியாத்:வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு கைதான இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர், செளதி அரேபியாவில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர்.

விக்டர் கொரியா, ரஞ்சித் சில்வா, சந்தோஷ்ய குமார், ஷர்மீளா குமாரா ஆகிய நான்கு பேருக்கும் ரியாத்தில் இந்த மரண தண்டனைநிறைவேற்றப்பட்டது.

இந்த நால்வரும், செளதியில் பல இடங்களில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். செளதியைச் சேர்ந்த ஒருவரின் காரைப் பறித்துக்கொண்டு அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த செளதி நீதிமன்றம், நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்தது.இதையடுத்து நான்கு பேரும் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு செளதியில் 34 பேரும், 2005ல் 36 பேரும், 2004ல் 86 பேரும் மரண தண்டனைக்கு ஆளானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X