சென்னை-சிலிண்டர் வெடித்து 15 வீடுகள் சேதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். 15 வீடுகள் சேதமடைந்தன.
ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார். தனியாக வசித்து வரும் இவர் நேற்று இரவு சமையல் செய்து விட்டு கேஸ் சிலிண்டரை ஆப்செய்யாமல் விட்டுவிட்டார். இந்நிலையில் இன்று காலை சமையல் அறையில் உள்ள லைட்டை போட்டுள்ளார். அப்போது அங்கு கசிந்த நிலையில்இருந்த கேஸ் வெடித்தது.
இதில் செந்தில் குமார் படுகாயமடைந்தார். மேலும் இவரது வீடும் உடைந்து விழுந்தது. இவரது வீட்டை சுற்றியிருந்த 15 வீடுகளும் சேதமடைந்தன.மிகவும் கவலைக்கிடமாக நிலையில் செந்தில்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications