கேரளத்துக்கு எதிரான பந்த்-ஸ்தம்பித்தது கோவை
கோவை:சேலம் கோட்டம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கேரளாவைக் கண்டித்து கோவை மாநகரில் இன்றுமுழு அடைப்புப் போராட்டம் நடந்தது. இதனால் நகரமே வெறிச்சோடிப் போனது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துவிட்டது. பஸ்கள், ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள், டாக்ஸிகள்இயங்கவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டன. பல தனியார்நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன. வெளியூர் பஸ்கள் கோவைக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டன.
கோவை, திருப்பூர், போத்தனூர் ஆகிய பகுதிகளை திட்டமிட்டபடி சேலம் கோட்டத்துடன் இணைக்கவலியுறுத்தி இந்த பந்த் நடந்தது. பந்தையொட்டி நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பந்தையொட்டி கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்கள் முன் மறியல் போராட்டங்களும் நடந்தன. இன்றுகாலை பாலக்காடு-திருச்சி பாஸஞ்சர் ரயிலை கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மறித்து போராட்டம்நடத்தினர். போலீசார் வந்து அவர்களை கலைத்த பின் அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச்சென்றது.
இன்று கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டதால் நீதிமன்றப் பணிகள் முழுமையாகபாதிக்கப்பட்டன. நகரமே வெறிச்சோடிக் கிடந்தது. கோவை சென்ட்ரல் பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம்,உக்கடம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்கள் காலியாகக் கிடந்தன.
கோவை-கேரளா இடையிலான பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. அதே போல கேரளத்தில்இருந்து கோவை வரும் பஸ்கள் வாளையாரிலேயே நிறுத்தப்பட்டன.
சேலம் கோட்டம் உருவாவதைத் தடுக்க கேரள அரசியல்வாதிகளும், ரயில்வேயில் உள்ள கேரள அதிகாரிகளும், டெல்லியில் காங்கிரசுக்குநெருக்கமாக உள்ள மூத்த கேரள அதிகாரிகளும் முயன்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள தென்னக ரயில்வே தலைமையகத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு மலையாள அதிகாரியும் இந்த உள்குத்துவேலையில் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications