பெண் கற்பழித்துக் கொலை: மகனும் படுகொலை

Subscribe to Oneindia Tamil

பவானி:ஈரோடு மாவட்டம் பவானி அருகே விதவைப் பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். அதைப் பார்த்து விட்ட 5 வயது மகனையும்குற்றவாளிகள் கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர்.

பவானி அருகே காளிங்கராயன்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரும், மனைவி பேபியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து விஜயா என்ற பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார் பழனிச்சாமி.

Vijaya and her Son

விஜயாவுக்கு, கதிரவன் என்ற 5 வயது மகன் இருந்தான். சமீபத்தில் பழனிச்சாமி இறந்து விட்டார். இதையடுத்து தனது அத்தை மாதேஸ்வரிவீட்டுக்கு அருகே இடம் பெயர்ந்த விஜயா, தனது மகனுடன் வசித்து வந்தார்.

கதிரவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் யுகேஜி படித்து வந்தான். தினசரி ஆட்டோவில் போவது வழக்கம். நேற்று காலையும் வழக்கம் போலஆட்டோ வந்தது. ஆனால் கதிரவன் வரவில்லை. இதையடுத்து ஆட்டோ டிரைவர், விஜயாவின் உறவினர் மாதேஸ்வரியிடம் போய்விசாரித்துள்ளார்.

இதையடுத்து மாதேஸ்வரி விஜயாவைக் கூப்பிட்டபடி அவரது வீட்டுக்குள் போனார். அங்கு தாயும், மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக்கிடந்தனர்.

விஜயாவின் உடைகள் அலங்கோலமாக கிடந்தன. அவரைக் கற்பழித்து கொலை செய்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இதை கதிரவன்பார்த்திருக்க வேண்டும், அவன் கூச்சல் போட்டால் ஆபத்து என்று கருதி அவனையும் கழுத்தை அறுத்து கொலைகாரர்கள் கொன்றிருக்கிறார்கள்,

குற்றவாளிகள் வீட்டின் புகை போக்கி வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை குறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+