சென்னையில் பிரபல ரெளடி வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரெளடி எதிர் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான்.

சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவன் அகஸ்தீஸ்ரவன். 32 வயதாகும் இவன் அப்பகுதியில் உள்ள ரெளடிகளில்ஒருவன். கொலை வழக்கு ஒன்றில் கைதான அகஸ்தீஸ்வரன் சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தான்.

இன்று அதிகாலை தனது மீனவர் குப்பம் அருகே வந்து கொண்டிருந்த அகஸ்தீஸ்வரனை எதிர் கோஷ்டியைச் சேர்ந்த ஒரு கும்பல் வழிமறித்து,சரமாரியாக வெட்டித் தள்ளிவிட்டு தப்பிவிட்டது.

சரமாரியாக வெட்டப்பட்ட அகஸ்தீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானான். அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லிமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்தக் குப்பத்தில் பதட்டம் நிலவுகிறது. கொலை வழக்கு மட்டுமல்லாமல், பல்வேறு அடிதடி, கட்டப் பஞ்சாயத்துஉள்ளிட்டவற்றிலும் அகஸ்தீஸ்வரனுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+