மறு தேர்தல் ஒரு வெட்கக்கேடு: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியும் தேர்தல் ஆணையர் பதவியில் சந்திரசேகரன் ஒட்டிக் கொண்டிருப்பதும், மறு தேர்தலையும் அவரதுதலைமையிலேயே நடத்தியிருப்பதும் வெட்கக் கேடான சம்பவம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் பங்கேற்பதில்லை என்று அதிமுகவும், மதிமுகவும்முடிவு செய்தன. இந்த முடிவு சரியானதுதான், நியாயமானதுதான் என்பதை ஞாயிற்றுக்கிழமை சென்னை வாக்காளர்களும், தேர்தலைப்புறக்கணித்து நிரூபித்துள்ளனர்.

காலை 10 மணி வரை 10 சதவீத வாக்குகள் கூடப் பதிவாகவில்லை. பிற்பகலுக்கு மேல் பதிவான வாக்குகளில் பெரும்பாலானவை கள்ளஓட்டுக்கள்தான். ஆளுங்கட்சியினரே போட்ட ஓட்டுக்கள் இவை.

சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தும் கூட தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து சந்திரசேகரன் விலகாமல் ஒட்டிக் கொண்டிருப்பதுவியப்பைத் தருகிறது.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, திமுக கூட்டணியில் ஒரு கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சந்திரசேகரனை விமர்சித்துள்ளது, பதவிவிலகக் கோரியுள்ளது. ஆனால் சந்திரசேகரன் விலகவில்லை, அவரை விலக்க அரசும் நடவடிக்கை எடுக்கவும் இல்லை.

தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து விலகாவிட்டால் அதற்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினும்பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

(அய்யா வைகோ, எங்கே போயிடீங்க இத்தனை நாள்? தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கோர்ட் தீர்ப்பு வந்திருக்கு.. படிச்சீங்களா?.. வாயே திறக்ககாணோம்?)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+