காவல் நிலையத்தில் வக்கீல்-காக்கிகள் அடிதடி!
செங்கம்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் நிலையத்தில் வழக்கு குறித்த விவரம் கேட்கச் சென்ற வழக்கறிஞர்களுக்கும், போலீஸாருக்கும்இடையே கடும் மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் மனோகரனின் ஜூனியர் முருகன். ஒரு வழக்கு தொடர்பா சில தகவல் அறிய செங்கம் காவல்நிலையத்திற்கு அவர் சென்றார்.
அப்போது காவல் நிலையத்தில் எஸ்.ஐ. தமிழரசியிடம் கேட்டுள்ளார். காத்திருங்கள் கூறுகிறோம் என்று தமிழரசி கூறியுள்ளார். ஆனால் இப்போதேவிவரம் வேண்டும் என்று முருகன் வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன், போலீஸ்காரர் தஞ்சமூர்த்தி ஆகியோர் தமிழரசிக்கு ஆதரவாக பேசி முருகனைகண்டித்துள்ளனர். இது மோதலாக மாறி கைலகலப்பில் இறங்கினர்.
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, தஞ்சமூர்த்தி ஆகியோர் முருகனைத் தாக்கியுள்ளனர். பதிலுக்கு அவரும் அடித்துள்ளார். காவல் நிலையமே இந்த மோதலால்களேபரமாகிப் போனது, நான்கு பேரும் உள்ளேயே கட்டி உருண்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் முருகன் கையில் கைவிலங்கை மாட்டி, தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்ததும் ஏராளமான வழக்கறிஞர்கள் விரைந்து வந்துமுருகனுக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர். காவல் நிலையத்தில் இருந்த பொருடகளை அடித்து நொறுக்கினர்.
வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த இந்த மோதலை ஏராளமான பொதுமக்கள் கூடி நினறு வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்துமாவட்ட எஸ்.பி. முருகன் விரைந்து வந்து அனைவரையும் விலக்கி விட்டார்.
அதற்குள் 200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆட்சித் தலைவர் சத்யபிரசாத் சாஹு, டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ. உள்ளிட்டோரின் கார்களை மறித்துபோராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.
பின்னர் மாவட்ட நீதிபதி சந்திரசேகரன், எஸ்.பி. முருகன், வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இதில்உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வக்கீல் முருகன விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications