For Daily Alerts
Just In
கலாம் நாளை வருகை: குன்னூரில் பலத்த பாதுகாப்பு
குன்னூர்:குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 24ம் தேதி குன்னூர் வருவதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். சென்னை மற்றும் கோவையில் பல்வோறு நிகழ்ச்சியில்கலந்து கொள்கிறார். 24ம் தேதி குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில்பங்கேற்கிறார்.
கலாம் வருகையைத் தொடர்ந்து குன்னூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் தீவிர சோதனைநடத்தப்பட்டு வருகிறது.
விழா நடைபெறும் ராணுவ பயற்சி கல்லூரி வளாகம் மற்றும் ஹெலிகாப்டர் தளம் போன்றவை உளவுத்துறை போலீசார் வசம் வந்துள்ளது. தமிழக,கேரளா எல்லை பகுதியில் உள்ள கிண்ணத்துரை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகின்றது.
Comments
Story first published: Thursday, February 22, 2007, 5:30 [IST]