அவதூறு வழக்கு-ஜெ கோர்ட்டில் ஆஜராக விலக்கு
சென்னை:திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை என உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எம்ஜிஆரின் சிலை அமைப்பது குறித்து ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதியை விமர்சனம்செய்திருந்தார். எம்ஜிஆர் சிலையை வைக்க விடாமல் தடுப்பதாக அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து ஜெயலலிதா மீது சென்னை நகர அரசு வழக்கறிஞர் அவதூறு வழங்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 26ம் தேதிநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவுட்டு ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பினார்.
இந்த சம்மனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். அதில் நான் கருணாநிதி என்ற தனி நபரைத்தான் அறிக்கையில்கூறியிருந்தேன். முதல்வரை பற்றி சொல்லவில்லை. எனவே என் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர முடியாது என்று கூறியிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும்ஜெயலலிதாக்கு அனுப்பிய சம்மனையும் ரத்து செய்து, நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை எனவும் அவர் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications