இளம்பெண்ணை கற்பழித்து ஆபாச படம்:கிட்னி புரோக்கர் சரண்-போலீஸ் விசாரணை
நாமக்கல்:பெண்ணை கற்பழித்து ஆபாச படம் எடுத்தாக வந்த புகாரை தொடர்ந்து கிட்னி புரோக்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல் குமாரபாளையத்தை சேர்ந்த வெங்கடலட்சுமி (19) தனது தங்கை திருமணத்திற்கு பண உதவி செய்யுமாறு கோவையை சேர்ந்த கிட்னிபுரோக்கர் கோபால் என்பவரின் உதவியை நாடினார்.
கோபாலும் வெங்கடலட்சுமிக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். இதை நம்பி கோவை சென்ற வெங்கடலட்சுமியை கோபால், மற்றும் மதுரையைசேர்ந்த செல்வம் என்ற சக்திவேல், கோவை ஜான் ஆகிய மூவரும் ஒரு லாட்ஜில் வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தனர்.அத்தோடு அவரை ஆபாசமாக படமும் எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது மிரட்டியே கற்பழித்து வந்தனர்.
இதுதொடர்பாக சக்திவேலை போலீசார் கைது செய்தனர். கோபால், ஜான் ஆகியோர் தலைமறைவாகினர். வெங்கடலட்சுமியை சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 நாட்கள் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதுே.
இதுகுறித்து வெங்கடலட்சுமி, அவரது கணவர் தர்மராஜ், வெங்கடலட்சுமியின் தந்தை, தாயார் மற்றும் உறவினர்களிடம் நாமக்கல் மாஜிஸ்திரேட்டுநீதிமன்றத்தில் தனித்தனியாக ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.
இந் நிலையில் கோபால் ஈரோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை போலீசார் 5 நாட்கள் போலீசிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்ற மாஜிஸ்திரேட்டு கோபாலை 5 நாட்கள் போலீசிஸ் காவலில் எடுத்து விசாரிக்கஅனுமதி அளித்தார்.
அதன்படி போலீசார் கோபாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications