இலங்கை தமிழர்கள் கணக்கெடுப்புக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதக் கடத்தல் அதிகரித்துள்ளதைத் தொடர்நது தமிழகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள் குறித்த விவரங்களைசேகரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

சமீப காலமாக சென்னை, மதுரை, தூத்தக்குடி வழியாக இலங்கைக்கு ஆயுதம் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விடுதலைப்புலிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுளளனர். பெருமளவிலான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கியூ பிரிவு போலீஸாரும், மத்திய உளவுத் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆயுதக்கடத்தலுக்கு தமிழக அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களில் சிலர் உதவியாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து, அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்த கணக்கெடுப்பை அரசு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அகதிகள்குறித்த அனைத்து விவங்களையும் கியூ பிரிவு போலீஸார் சேகரித்து வருகினறனர்.

இதுதவிர, முகாம்களில் தங்காமல், தனியாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படவுளளது. இவர்களின்செயல்பாடுகள் கண்காணிக்கப்படவுள்ளது.

புலிகளை பிடிக்க அதிரடி வேட்டை:

இதற்கிடையில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு ஆயுதம் கடந்த முக்கிய காரணமாக இருந்த விடுதலைப் புலிகள்இயக்கத்தை சேர்ந்த கிருபா என்பவரைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 டன் அலுமினிய குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார்கடந்த சில தினங்களுக்கு முன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக செல்வராஜ், குணசேகர பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில் அலுமினிய தகடுகள், பவுடர்கள் போன்றவற்றை வாங்கி கொடுப்பதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர்அருகே உள்ள பொந்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முரளி, பூமி, கண்ணன், பெரியசாமி, கர்ணன், முருகநாதன் ஆகிய 6 பேரை நேற்று போலீசார்கைது செய்தனர்.

அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் ஆயுதம் கடந்த முக்கிய காரணமாக இருந்தது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தகிருபா என்ற கிருபாகரன் என தெரிய வந்துள்ளது. இவர் தற்போது தமிழ்நாட்டில் தான் பதுங்கி இருப்பதாகத் தெரிகிறது.

அதே போல கிருபாகரனுக்கு உதவியாக இருந்த கண்ணன், வேலுசாமி ஆகியோரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+