லண்டன்: சீக்கிய மாணவருக்கு அடி-டர்பன் கிழிப்பு
லண்டன்:லண்டனில், தலைப்பாகையில் வெடிகுண்டு மறைத்து வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு சீக்கிய மாணவரை சிலர் அடித்து உதைத்த சம்பவம் அங்குள்ளசீக்கியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தில், லகிஸ்வர் சிங் என்ற சீக்கிய மாணவர் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் தனது கல்விச் செலவுக்காக, லண்டனில் உள்ளசூப்பர் மார்கெட் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு, வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிலர் அவரிடம் தகராறு செய்தனர். உன்தலைப்பாகையில் (டர்பன்) வெடிகுண்டு மறைத்து வைத்திருக்கிறாயா என கேட்டு தகராறு செய்தனர். பின்னர் தலைப் பாகையை பறித்து கிழித்துஎறிந்தனர், லகீஸ்வர் சிங்கையும் அடித்து உதைத்தனர்.
அந்த சமயத்தில், அங்கு போலீஸார் வரவே, சீக்கிய மாணவரைத் தாக்கிய கும்பல் தப்பி ஓடி விட்டது. தன் மீதான தாக்குதல் குறித்து லகீஸ்வர் சிங்போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வருகின்றனர்.
ஸ்காட்லாந்தில் வெளிநாட்டவருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மும்பை திரும்ப லகீஸ்வர் சிங் முடிவு செய்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications