சைதை நீதிமன்றத்தில் தேவிப்பிரியா சரண்
சென்னை:நடிகை தேவிப்ரியா இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நடிகை தேவிப்ரியா காதலன் ஐசக்கை திருமணம் செய்ய முடிவு செய்தில் இருந்தே, தேவிப்ரியா மீது ஐசக்கின் முதல் மனைவி ஸ்டெல்லா தன்னைகொலை செய்ய முயன்றதாகவும், வரதட்சணை கொடுமைப்படுத்தியதாகவும், ஐசக் மீதும் அதற்கு உடத்தையாக இருந்தாக தேவிப்பிரியா மீதும்புகார் கொடுத்தார்.
![]() |
இதையடுத்து ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினியும் தேவிப்பிரியா மீது கொலை மிரட்டல் விடுத்தார் என புகார் கொடுத்தார். இந்த வழக்கில்தேவிப்பிரியா மீதான வழக்கீல் அவருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. அதில் ரூ. 50,000 சொந்த ஜாமீனும், ரூ. 50,000 தனிநபர்ஜாமீனும் கொடுத்து சைதாப்போட்டை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தேவிப்பிரிய இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
வாடகை காரில் தேவிப்பிரியாவும் அவரது வக்கீல் ஆர்.எஸ்.ஜெயினும் நீதிமன்றத்துக்கு வந்தனர். அப்போது மாஜிஸ்திரேட்டு இல்லாததால்நீதிமன்றத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர்.
![]() |
பின்னர் 12.40க்கு மாஜிஸ்திரேட் காயத்ரி, தேவிப்பிரியாவை அழைத்தார். பின்னர் அவர் கூண்டில் ஏறியதும் அவரது வீட்டு முகவரியை கேட்டார்.அப்போது தேவிப்பிரியா பதட்டத்தில் தனது வீட்டு நம்பரை மாற்றிக் கூறினார். பின்னர் முகவரியை சரியாக தெரிவித்தார்.
இதையடுத்து ரூ. 50,000 சொந்த ஜாமீனும், தனிநபர் ஜாமீனும் வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
தேவிப்பிரியா மீது விபச்சாரத் தடுப்புப் போலீஸார், ப்ளூ பிலிமில் நடித்ததாக தேவிப்பிரியா மீது வழக்குப் போட உள்ளதாக செய்திகள்வெளியாகிய நிலையில், தேவிப்பிரியா அவசரம் அவசரமாக வந்து சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் பொய் கேஸ், அத்தனை புகாரும் பொய் என்பதை நான் சீக்கிரமே நிரூபிப்பேன். என் பக்கம் எந்தத் தவறும் இல்லை. நான் யாரையும்மிரட்டவில்லை, யார் வாழ்க்கையையும் பறிக்கவில்லை. பிரச்சனை எல்லாம் முடிந்த பின் முறைப்படி ஐசக்கை திருமணம் செய்து கொள்வேன் என்றுகூறி விட்டு தனது வக்கீல்களுடன் காரில் ஏறிப் பறந்து விட்டார்.














Click it and Unblock the Notifications