காவிரி: கர்நாடகத்தில் மீண்டும் இன்று அனைத்து கட்சி கூட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதிக்க கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம் மீண்டும் இன்று நடக்கிறது.
ஏற்கனவே தீர்ப்பு வந்தவுடன் கடந்த 5ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார் முதல்வர் குமாரசாமி. ஆனால் 1,000 பக்கம்கொண்ட தீர்ப்பை முழுமையாக ஆராய முடியாததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் இன்று இரண்டாவது கூட்டம் நடக்கிறது. இக் கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துவிவாதிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே தீர்ப்பை நடுவர் மன்றத்திலேயே எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகவும், மத்திய அரசின் தலையீட்டைக் கோரவும் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications