ஆம்புலன்சில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி!!
திருவண்ணாமலை:கர்நாடகாவுக்கு ஆம்புலன்சில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்றில் 3பெண்கள் உள்பட 5 பேர் இருந்தனர். அதில் படுத்திருந்த ஒரு பெண் வலியால் துடித்து கொண்டிருந்தார். உடனிருந்தவர்கள் அவரை அறுவைசிகிச்சைக்காக கொண்டு செல்வதாக கூறினர்.
ஆனால் சந்தேகம் அடைந்த போலீஸார் ஆம்புலன்சை சோதனை செய்தபோது அனைத்து இருக்கைகளும் எடுக்கப்பட்டு, அதன் அடியில் 75 கிலோஎடை கொண்ட 18 ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
உண்மை தெரிந்ததும் தப்பித்து ஓட முயன்ற, கர்நாடகத்தை சேர்ந்த சித்தேஷ், ரவி, அய்யம்பாளையத்தை சேர்ந்த ரோஸ், நிர்மலா, அஞ்சலை ஆகிய5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அத்துடன் ஆம்புலன்சும், அரிசி மூட்டைகளையும் கைப்பற்றினர்.
அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில், முதலில் பஸ்,லாரிகள் மூலமாக கடத்தியதாகவும், பின்னர் போலீஸ் கெடுபிடி காரணமாக சந்தேகம் வராமல்இருக்க ஆம்புலன்சில் கடத்தியதாகவும் தெரிவித்தனர்.
வயிற்று வலியால் துடிப்பது போல நிர்மலா, ரோஸ், அஞ்சலை ஆகியோர் மாறி மாறி நடிப்பார்களாம்.
அடப் பாவிகளா!












Click it and Unblock the Notifications