ரவுடிகளை அனுப்பிய ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கி
டெல்லி:கடனை வசூலிக்க ரவுடிகளை அனுப்பிய ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துடெல்லி நுகர்வோர் தீர்ப்பாணையம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் ரிபு பக்ரு என்பவர் ஸ்டாண்டர்ட் சாட்டர்டு வங்கியின்கிரெடிட் கார்டு வைத்துள்ளார். அதில் ரூ. 28 ஆயிரம் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் இருந்துவந்தார்.
இதையடுத்து வங்கியிலிருந்து ரவுடிக் கும்பலை அனுப்பியுள்ளனர். அவர்கள் பக்ருவை மிரட்டியுள்ளனர். இந்நிலையில் கடன் செலுத்தத் தவறியவர்கள் பட்டியிலிருந்து பக்ருவை நீக்கியுள்ளது வங்கி நிர்வாகம்.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் பக்ரு நுகர்வோர் ஆணையத்தில் புகார் செய்தார். அதில், ரவுடிகளை வைத்துமிரட்டியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், கடன் செலுத்த தவறியவர்கள் பட்டியலில் சேர்த்ததால் தன்பெயர் கெட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இதை விசா>த்த நீதிபதி கபூர், பக்ருவுக்கு இழப்பீடாக ரூ. 20 ஆயிரம் தர வேண்டும் நுகர்வோர் பாதுகாப்புநிதியில் அவரது பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.
மேலும், சட்டரீதியான வழிமுறைகள் இருக்கும் போது ரவுடிக் கும்பலை அனுப்பி பணம் வசூலிக்கும் செயல்சட்டவிரோதமானது. இதுபோல நிதி நிறுவனங்கள் கடன் வசூலிக்க ரவுடிகளை அனுப்பினால் வங்கிஅதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications