வருமான வரி விலக்கு ரூ. 1.5 லட்சமாகிறது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1.5 லட்சமாக உயரும் எனத் தெரிகிறது.

நிதியமைச்சர் சிதம்பரம் வரும் 28ம் தேதி மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட்டில் இடம் பெறக் கூடிய முக்கிய அம்சமாக, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நிதித் துறைஅதிகாரிகள் கூறுகையில், ரூ 1 லட்சமாக உள்ள வருமான வ>விலக்கு உச்சவரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கானநடுத்தர வருவாய் பிரிவினர் பயன் பெறுவர்.

இந்த நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அரசுக்கு வரி வருவாய் பெருகியுள்ளது. இதனால் வருமானவரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

வரி விலக்கு உச்சவரம்புத் தொகையை மேலும் ரூ.50,000 உயர்த்தியதன் மூலம் வரி செலுத்துவோரில் கீழ்நிலை நடுத்தர வருமானப் பிரிவினர்விடுவிக்கப்பட்டனர்.

இதனால் வரி செலுத்துவோர் பட்டியலில் உள்ளவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைவதால் வரி ஏய்ப்பில் ஈடுபடும் வசதியுள்ள பிரிவினர் மீதுஅதிக கவனம் செலுத்த முடியும். இதனால் நடுத்தர குடும்பங்களின் பொருளாதார நிலை உயரும் என சிதம்பரம் கருதுவதாக அவர்கள் கூறினர்.

இருப்பினும் வரி விகிதங்களில் மேலும் குறைப்பு இருக்காது எனவும் நிதித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+