ஸ்பெஷலை நிராகரித்த சமத்துவ கலாம்!
பெல்காம்:கர்நாடக மாநிலம் பெல்காம் நகரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், தனக்கு அளிக்கப்பட்ட விசேஷ இருக்கையை மறுத்து விட்டு, மற்றவர்களுக்கு போடப்பட்ட சாதாரண இருக்கையிலேயே அமர்ந்தார்.
விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பெல்காமில் நேற்று நடந்தது. விழா தொடங்க 30 நிமிடங்களுக்கு முன்பே கலாம் நிகழ்ச்சிக்குவந்து விட்டார். அவருறான் கர்நாடக உயர் கல்வி அமைச்சர் சங்கரமூர்த்தி, முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளர் வி.எஸ்.அருணாச்சலம் உள்ளிட்டோருக்கு அவர்விருதுகள் வழங்கினார்.
மேடையில், அனைவருக்கும் சாதாரண இருக்கைகளும், கலாமுக்கு மட்டும் விசேஷ இருக்கையும் போடப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு கொடுக்கப்பட்டிருந்தவிசேஷ இருக்கையை நிராகரித்த அப்துல் கலாம், மற்றவர்களுக்குப் போடப்பட்ட சாதாரண இருக்கையையே தனக்கும் போடக் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஸ்பெஷல் இருக்கை அகற்றப்பட்டு சாதாரண இருக்கை தரப்பட்டது. அதன் பின்னரே கலாம் இருக்கையில் அமர்ந்தார்.
அருணாசலத்துக்கு விருது வழங்குகையில், நான் அக்னி ஏவுகணை தயாரிப்பில் தீவிரமாக இருந்தபோது அருணாசலம் எனக்கு செய்த உதவிகள், ஆலோசனைகள்மறக்க முடியாதவை. எனது சாதனைகளுக்கு பெரும் உதவியாக இருந்தவர் அருணாசலம். அவருக்கு விருது தருவதை பெருமையாக நினைக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications