புலிகள் ஊடுருவல்?: மதுரை அகதிகள் முகாம்களில் அதிரடி சோதனை
மதுரை:விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் மதுரை மாவட்டத்தில் உள்ளநான்கு அகதிகள் முகாம்களிலும் கியூ பிரிவு போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் சமீபத்தில் விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவைபறிமுதல் செய்யப்பட்டன. விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
அதிகரித்து வரும் கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளில் சிலர்தான்காரணம் என கியூ பிரிவு போலீஸார் சந்தேகிக்கின்றனர். அகதிகள் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள்ஊடுறுவி வருவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந் நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருக்கலாம்என்ற சந்தேகம் ஏற்பட்டதையடுத்து திருவாதவூர், ஆனையூர், குடிசேரி, உச்சப்பட்டி ஆகிய இடங்களில் உள்ளஅகதிகள் முகாம்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
முகாம்களில் தங்கியுள்ள 3,000க்கும் மேற்பட்ட அகதிகளிடம் தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.புதிதாக சேர்ந்துள்ள அகதிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதுதவிர மதுரையில் உள்ள சிலரின் வீடுகளும் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications