என்னை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார்கள்-கேப்டன்
சேலம்:வருமான வரி சோதனை செய்து, என்னை அசிங்கப்படுத்தி ஜெயலில் போட நினைக்கிறார் ஒருவர் என தேமுதிக கட்சியின் தலைவரும்நடிகருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் ஈஸ்வரன் இல்ல திருமணத்தில் பேசிய விஜய்காந்த்,
வருமான வரி சோதனை என்று பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து, என்னை அசிங்கப்படுத்தி ஜெயலில் போட வேண்டும் என்று ஒருவர்நினைக்கிறார்.
பல வகையில் எனக்கு இம்சை கொடுத்து கட்சியின் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். தடுக்க தடுக்கத்தான் தேமுதிக வளரும். எம்ஜிஆர் கட்சிஆரம்பித்தபோது பல்வேறு இன்னல்களுக்கு ஆனார். அவரை விட எனக்கு 3 மடங்கு தொந்தரவு கொடுக்கின்றனர்.
எனது திருமண மணடபத்தை இடிப்பதில் சூட்சுமம் இருக்கிறது. நான் கொடுத்த மாற்று திட்டத்தில் டெக்னிக்கல் பிராப்ளம் என்கிறார்கள். எனதுமண்டபத்தை விட்டுகொடுப்பதில் ஆட்சேபணை இல்லை. மக்கள் கொடுத்ததை மக்களுக்கே கொடுக்க நான் தயார்.
போலீஸார் ஆளுங்கட்சிக்கு எடுபிடியாக செயல்படுகிறார்களே தவிர காக்கிச் சட்டைக்குரிய கண்ணியத்தை கொடுக்கவில்லை.
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்றோம், அதில் ஒருவரை விலை கொடுத்து வாங்கிவிட்டனர். நமது கட்சியில்ஏழைகள் இருப்பதால், செய்யும் தொழிலை வைத்து மிரட்டியே மாற்றுக் கட்சியில் சேர வைக்கின்றனர்.
நான் தேர்தலில் வளர்ச்சி திட்டங்களை சொன்னேன், அவர்கள் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்துவிட்டனர்.
இலக்கியத்தையும் தமிழையும் பற்றி ஒருவர் பேசுகிறார், ஆனால் நாட்டில் வன்முறை தான் நடக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications