தமிழகத்திலும் பாஜக அலை வீசும்-இல.கணேசன்
சென்னை:விலைவாசி உயர்வு காரணமாகவே பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன்கூறியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலிலேயே பாஜகவை விட 7 இடங்கள் தான் காங்கிரசுக்கு கூடுதலாகக் கிடைத்தன. ஆனால், அதையே அமோக வெற்றிஎன்று மகிழ்ந்தது காங்கிரஸ்.
அதைத் தொடர்ந்து நடந்த குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகார் மாநிலங்களில் பாஜக கூட்டணியே வென்றனது. மும்பை மாநகராட்சித்தேர்தலில் வென்றோம். உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வென்றோம்.
சுனாமி மாதிரி தாக்குதல் நடந்த பின்னரும் சென்னை மாநகராட்சியில் 2 இடங்களை பாஜக கைப்பற்றியது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக இப்போது பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்துள்ளோம். உத்தரப் பிரதேச தேர்தலில்வெல்வோம்.
தீவிரவாதத்தை அடக்க மத்திய அரசு தவறிவிட்டது, நாடெங்கிலும் கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் இன்னலுக்குஆளாகியுள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிருப்தியே காங்கிரசுக்கு கடும் தோல்வி கிடைத்துள்ளது.
பாஜகவின் இந்த வெற்றி நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும். அடுத்த தேர்தலில் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும். வடக்கிலும் மேற்கிலும்இருந்து கர்நாடகம் வரை வீசியுள்ள பாஜக அலை தமிழகத்திலும் வீசும் என்றார்.












Click it and Unblock the Notifications