எம்.ஜி.ஆருக்கு 18, ஜெ.வுக்கு 1 கோடி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:எம்.ஜி.ஆர். மறைந்தபோது 18 லட்சம் தொண்டர்களைக் கொண்டதாக இருந்த அதிமுகவை, இன்றைக்கு 1 கோடி தொண்டர்களைக் கொண்ட,எஃகுக் கோட்டையாக மாற்றியுள்ள பெருமை ஜெயலலிதாவையேச் சாரும் என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

தூத்துக்குடியில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி நடந்த கூட்டத்தில் பன்னீர் செல்வம் பேசுகையில், அதிமுக இன்றைக்கு எஃகுக்கோட்டையாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஜெயலலிதாதான். எம்.ஜி.ஆர். மறைந்தபோது அதிமுகவில் 18 லட்சம் தொண்டர்கள்தான்இருந்தனர். ஆனால் அதை 1 கோடி தொண்டர்களைக் கொண்ட கட்சியாக மாற்றிய பெருமை ஜெயலலிதாவையேச் சேரும்.

கடந்த 2001ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, தமிழகம் வீழ்ந்து கிடந்தது. பொருளாதாரம் தாழ்ந்து கிடந்தது. பல்வேறு சீர்திருத்தநடவடிக்கைகள் மூலம் தூக்கி நிறுத்தி, தமிழகத்தை தலைநிமிரச் செய்தவர் நமது புரட்சித்தலைவிதான்.

ஆனால் இன்றைக்கு கருணாநிதி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார். தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்வன்முறையைப் பார்த்து நாடே சிரித்தது. இதன் மூலம் தமிழகத்தையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ளார் கருணாநிதி. இப்படி ஒரு கேலிக்கூத்துஎங்கும் நடந்ததில்லை என்றார் பன்னீர் செல்வம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+