கர்நாடகம்: இன்னும் ஓயாத காவிரி போராட்டம்

Subscribe to Oneindia Tamil

மைசூர்:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் தொடர்ந்து ஆங்காங்கே சாலை மறியல்களும், தர்ணாக்களும், பேரணிகளும்உண்ணாவிரதங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியாகி 23 நாட்களாகி விட்டது. தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில், காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில்ஆரம்பத்தில் பெரியளவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. திரையுலகினரும், வக்கீல்களும் ஊர்வலம் சென்றார்கள். விவசாயிளுக்கு ஆதரவுதெரிவித்து நடிகர் அம்பரீஷ் தனது மத்திய அமைச்சர் பதவி மற்றும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அவர்அனுப்பிய ராஜினாமா கடிதம் முறையாக இல்லை என்று கூறி லோக்சபா சபாநாயகர் நிராகரித்து விட்டார். மறுபடியும் ராஜினாமா கடிதத்தைஅம்பரீஷ் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்னும் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆங்காங்கே சிறு அளவில் போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன. 23வது நாளானநேற்று, மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்தன.

மாண்டியா மாவட்டம் மத்தூர், சிவபுரா, மாண்டியா, பாண்டவபுரா, ஸ்ரீரங்கப்பட்டனா ஆகிய நகரங்களில் சாலை மறியல்கள் நடந்தன. இதனால்மைசூர்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இருப்பினும் கூட்டம் குறைவாக இருந்ததால், போக்குவரத்தில் பெரும்சிக்கல் ஏதும் ஏற்படவில்லை.

மைசூரில், கல்லூரி மாணவர்கள், ஊர்வலம் நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு கொடுத்தனர்.

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பல்வேறு கன்னட அமைப்புகளின் சார்பில் ஊர்வலங்கள் நடந்தன. கொள்ளேகாலில் நடந்த போராட்டத்தில் கன்னடஇயக்குநர் மகேந்திராவும், அவரது மனைவி நடிகை ஸ்ருதியும் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+