போலீஸ் குடியிருப்புக்கு குண்டு மிரட்டல்
சென்னை:சென்னை மண்ணடியில் உள்ள காவலர் குடியிருப்பில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் காவல்துறையின>ன் குடும்பங்கள்வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
சென்னை புறநகரில் உள்ள சேலையூர் காவல் நிலையத்திற்கு ஒரு அனாமதேய கடிதம் வந்தது. அதில், மண்ணடி காவலர் குடியிருப்பில் பலஇடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவை எந்த நேரத்திலும் வெடிக்கும் என எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து உஷாரான போலீஸார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் காவலர் குடியிருப்புக்கு விரைந்தனர். தகவல்அறிந்ததும் வீடுகளில் குடியிருந்தவர்கள் பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறி அங்கிருந்த மைதானத்தில் குழுமினர்.
போலீஸ் படை காவலர் குடியிருப்பு முழுவதையும் தீவிரமாக பரிசோதித்துப் பார்த்தது. இதில் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து பீதிக்கடிதத்தை அனுப்பியவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications