விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் தகர்ப்பு
கொழும்பு:விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றிக் கொண்டு வந்த கப்பலை, இலங்கைட கடற்படையினர் கொழும்பு அருகே இன்று காலை தாக்கி அழித்தனர்.
காலே துறைமுகத்திலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில், நடுக் கடலில் 220 அடி நீளம் கொண்ட பெரிய கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தஇலங்கை கடற்படையினர் அந்தக் கப்பலை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். ஆனால் கப்பல் நிற்காமல் தொடர்ந்து சென்றது.
மேலும், கப்பலில் இருந்தவர்கள், கடற்படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து கடற்படையினரும் திருப்பிச் சுட்டனர். இந்த்ததாக்குதலில் கப்பலில் தீப்பிடித்துக் கொண்டது. மேலும், கப்பலில் இருந்த வெடிபொருட்கள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியதால், கப்பல் முழுவதும்தீப்பிடித்து எறிந்தது. இதில் கப்பல் முழுமையாக சேதமடைந்தது.
அதில் எத்தனை பேர் இருந்தனர், அவர்கள் தீயில் கருகி விட்டார்களா அல்லது தப்பி விட்டார்களா என்பது தெரியவில்லை. அந்தக் கப்பலில் விடுதலைப் புலிகளுக்குஆயுதங்கள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications