தேர்தல் தோல்வியால் பாதிப்பில்லை: மன்மோகன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளால் மத்திய அரசுக்கு ஆபத்து ஏதும் இல்லை. இது மத்திய கூட்டணி அரசின் மீதானமக்கள் கருத்தும் அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. பஞ்சாபில் சிரோண்மனி அகாலிதளமும், பாஜகவும்இணைந்து ஆட்சியைப் பிடித்துள்ளன. உத்தரகாண்ட்டில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மணிப்பூரில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதை தோல்வி என்று நான் கூற மாட்டேன். மேலும்,சட்டசபைத் தேர்தல் முடிவுகள், மத்திய அரசை எந்தவிதத்திலும் பாதிக்காது.

மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். விலைவாசிப் பிரச்சினையும் கூட தோல்விக்குஒரு காரணமாக இருக்கலாம். தேர்தல் முடிவை மத்திய அரசு மீதான கருத்துக் கணிப்பாக கருத முடியாது.

குவாத்ரோச்சி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. குவாத்ரோச்சி விவகாரத்தில் அரசு எந்த்த தவறையும்செய்யவில்லை.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுவது வருந்தத்தக்கது, கண்டனத்துக்குரியது. குவாத்ரோச்சிவிவகாரம் தொடர்பாக சிபிஐக்கு அரசிடமிருந்து எந்த நிர்ப்பந்த.ம் கொடுக்கப்படவில்லை. இதில் யாருடைய தலையீடும் இல்லை என்றார்மன்மோகன் சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+