காவிரி: ரஜினி வீட்டு முன்பு போராட்டம்!
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடிகர், நடிகையரை திரட்டி ரஜினிகாந்த் போராட்டம் நடத்த வேண்டும் என்று கோரி சென்னையில் உள்ளரஜினி வீட்டு முன்பு போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சையைச் சேர்ந்த கம்பன் என்ற வழக்கறிஞர் தலைமையில் 20 பேர் இன்று போயஸ் கார்டன் பகுதிக்கு வந்தனர். ரஜினிகாந்த் வீட்டு முன்புதாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடிகர், நடிகையரை திரட்டி ரஜினி போராட்டம் நடத்த வேண்டும் என்று கோரி சாகும் வரைஉண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அனைவரும் அப்படியே சாலையில் அமர்ந்துபோராட்டத்தில் குதித்தனர். காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்க வேண்டும், நடிகர், நடிகையரைத் திரட்டிபோராட்டம் நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு சலசலப்புநிலவியது.












Click it and Unblock the Notifications