திருப்பதியில் சாமியார் தலை துண்டித்துக் கொலை
திருப்பதி:திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அருகே நாத்ஜி அபோரிபாபா என்ற சாமியார் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
வெங்கடாசலபதி கோவில் அருகே உள்ள தும்புரா தீர்த்தக் குளம் அருகே கடந்த 15ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வந்தவர் அபோரிபாபாசாமியார்.
திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இவரையும் தரிசித்து விட்டுச் செல்வது வழக்கம். தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாபாவை தரிசிக்கநீண்ட வரிசையில் நின்று கொண்டிருப்பது வழக்கம்.
இந்த நிலையில் பாபா சாமியார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தனது குடிலில் பிணமாகக் கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியுள்ளது.
பாபாவுக்கு 30க்கும் மேற்பட்ட சிஷ்யர்கள் உண்டு. பாபா அதிக அளவில் நகைகளை அணிவது வழக்கம். மேலும் பக்தர்கள் கொடுக்கும் பணமும்கட்டுக் கட்டாக அவரிடம் இருக்கும். இதுதவிர தங்க, வெள்ளிப் பாத்திரங்களும் நிறைய இருந்தன.
பாபாவுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கமும் இருந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சில வாலிபர்கள் பாபா சாமியாரிடம் வந்து பேசினர்.அப்போது கஞ்சாவையும் கொடுத்து விட்டுச் சென்றனர். அதன் பின்னர் பாபா சாமியார் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே அந்த நான்கு வாலிபர்கள்தான் கொலைக்குக் காரணமாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications