இந்திய அணிக்கு கமாண்டோ பாதுகாப்பு!
டெல்லி:மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி வருகிற 13ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இதற்காக ராகுல் டிராவிட் தலைமையிலானஇந்திய கிரிக்கெட் அணி அங்கு சென்றுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட சில வீரர்களுக்கு லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் கொலை மிரட்டல் உள்ளது. இந்தநிலையில் மேற்கு இந்திய தீவுகளுக்கு வந்துள்ள இந்திய அணிக்கு விசேஷ பாதுகாப்பு அளிக்க இயலாத நிலையில் உள்ளதாக மேற்கு இந்தியதீவுகள் நிர்வாகம் மத்திய அரசிடம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு தேசிய பாதுகாப்புப் படை (கருப்புப் பூனை) பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் அடங்கிய குழு விரைவில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சென்றுபாதுகாப்புப் பணிகளை பார்வையிடவுள்ளது.
மேலும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழிக்கும் சிறப்புப் படை வீரர்கள் குழுவும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு செல்லவுள்ளது.
வெளிநாடு செல்லும் இந்திய விளையாட்டு அணி ஒன்றுக்கு கருப்புப் பூனைப் பாதுகாப்பு தரப்படுவது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications