அவதூறு வழக்கு: கோர்ட்டில் வைகோ ஆஜர்
சென்னை:தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில்ஆஜரானார்.
மதிமுக உள்கட்சிப் பூசல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீது குற்றம் சாட்டி வைகோ பேட்டி அளித்தார். இதையடுத்து வைகோ மீது சென்னைநகர அரசு வழக்கறிஞர் ஷாஜகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் ஏற்கனவே ஒருமுறை நேரில் ஆஜரானார் வைகோ. இந் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போதுமீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி பெ>யகருப்பையா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வைகோ நேரில் ஆஜரானார். பின்னர் விசாரணை அடுத்த மாதம் 19ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் ரீதியாக பழிவாங்க இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. இதை உரியவிதத்தில் சந்திப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications