யோபு சொத்துக்களை விற்க போலீஸ் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:போலி பிஷப் யோபு சரவணனின் சொத்துக்களை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு, அவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களுக்குபணத்தை திருப்பி அளிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

சர்வதேச கல்வாரி மிஷன் என்ற பெயரில் வேலூர் மற்றும் சென்னையில் அலுவலகம் திறந்த யோபு சரவணன், ஏழைகளுக்கு வீடு கட்டித்தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளி ராஜேந்திரனும் கைது செய்யப்பட்டார்.

போலீஸார் தீவிர விசாரணை நடத்தி யோபு சரவணனுக்கு சொந்தமான கோவில்பட்டியில் உள்ள 175 ஏக்கர் நிலத்தை கண்டுபிடித்தனர். மேலும் 11சொகுசு கார்கள் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் ரொக்கம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூரில் உள்ள அவரது சொத்துக்கள்முடக்கப்பட்டன.

கோவில்பட்டியில் உள்ள 175 ஏக்கர் நிலம் மற்றும் எண்ணூரில் உள்ள அவரது 2 வீடுகள் ஆகியவற்றை முடக்குவதற்கு சிபிசிஐடி போலீசார்நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

யோபு மற்றும் அவரது கூட்டாளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 15 கார்களையும் ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதேபோல அவருடைய பிற சொத்துக்களையும் விற்று, அதன் மூலம் வரும் பணத்தை யோபுவிடம் ஏமாந்த கட்டிட கான்டிராக்டர்களுக்கு திரும்பிஅளிப்பது பற்றியும் சிபிசிஐடி போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+