2 நக்சலைட்டுகள் கைது-குண்டுகள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:தடை செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படையின் 2 தொண்டர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ஏராளமான நாட்டுவெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேடிருப்பு என்ற கிராமத்தில் பழனிமுருகன் என்பவரையும், எடத்தருவை கிராமத்தில் வைத்துகணேசனையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரும் தடை செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பழனிமுருகன் நாட்ட வெடிகுண்டுகளைத் தயாரித்து அவற்றை கணேசன் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். இருவரும் பிலால், முருகன்,டேணியல் ராஜ் ஆகியோருக்கு நாட்டு வெடிகுண்டுகளையும், வெடிபொருட்களையும் விற்றுள்ளனர்.

அவற்றை எடுத்துச் செல்லும் வழியில் நாட்டு வெடிகுண்டு தவறுதலாக வெடித்து 3 பேரும் காயமடைந்து போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.அவர்கள் கொடுத்த தகவலின் பேரில்தான் கணேசனும், பழனி முருகனும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+