குழந்தைகளுடன் கலாம் ஹோலி கொண்டாட்டம்
டெல்லி:ஹோலி பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஹோலிகொண்டாடினார். அதேசமயம், பிரதமர் மன்மோகன் சிங் ஹோலி கொண்டாட்டத்தில்பங்கேற்கவில்லை.
நேற்று இந்தியாவின் வட பகுதிகளில் ஹோலி சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையிலும் ஹோலி கொண்டாட்டத்திற்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், அவர்களில் பெரும்பாலானவர்கள் உடல் ஊனமுற்ற, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கலாமுடன் ஹோலிகொண்டாடினர்.
பல்வேறு பாடல்களுக்கு அவர்கள் நடனமாடி கலாமை மகிழ்வித்தனர். தான் எழுதிய கவிதை அடங்கிய வாழ்த்து அட்டைகளை அவர்களுக்குவழங்கினார்.
ரோஜாப் பூக்களின் பின்னணியில் அமைந்திருந்த அந்த வாழ்த்து அட்டையில்,
அழகான இந்த ஹோலி தினத்தில், மணம் வீச, நாம் அனைவரும் இணைந்து மலர்ந்தோம் என்று எழுதப்பட்டிருந்தது.
வழக்கம் போல குழந்தைகளுக்கு அறிவுரை கூறவும் கலாம் மறக்கவில்லை. குழந்தைகளிடம் அவர் பேசுகையில், நீங்கள் ஐந்து விஷயங்களைமறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உடல் நலம் இல்லாமல் இருக்கும் அண்டை அயலாரைப் பார்த்து அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து நலம் பெற வாழ்த்த வேண்டும்.
மருத்துவமனைகளுக்கு சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு இனிப்பு கொடுத்து ஆறுதல் கூற வேண்டும்.
பார்வையற்றவர்களை சாலையில் பார்த்தால் அவர்கள் சாலையைக் கடக்க உதவ வேண்டும். அல்லது அவர்களுக்குத் தேவையான உதவியைகேட்டுச் செய்ய வேண்டும்.
உங்களுக்கு நெருங்கிய நண்பர்களோ அல்லது உறவினர்களோ உங்களுடன் ஊடல் கொண்டிருந்தால் அல்லது நீண்ட காலமாக தொடர்புகொள்ளாமல் இருந்தால் நீங்களாகவே அவர்களுடன் பேச வேண்டும் அல்லது நேரில் சந்திக்க வேண்டும்.
எதையும் புன்னகையுடன் அணுக வேண்டும் என்று கலாம் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் ஹோலி களை கட்டியிருந்த அதே வேளையில் பிரதமர் மன்மோகன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.இதற்கு என்ன காரணம் என்பதை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை. ஹோலியைபிரதமர் கொண்டாடாவிட்டாலும் கூட அமைச்சர்கள், பிரமுகர்கள் பிரதமரை சந்தித்து ஹோலி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications