ஆவின் பால் விலை உயருகிறது!
சென்னை:ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 1.25 வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மாதந்தோறும்கூடுதல் தொகையை பாலுக்காக செலவிட நேரிடும்.
தனியார் பால் உற்பத்தி நிலையங்கள் பால் விலையை ஏற்றி விட்டன. தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் பால் விலையை உயர்த்தாமல்இருந்து வந்தது.
இந்த நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்க நிர்வாகிகள் முதல்வர்கருணாநிதி, பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 12 ஆக (தற்போது 10.50 ஆக உள்ளது) உயர்த்த முடிவு செய்யப்பட்டது. விற்பனை விலையைலிட்டருக்கு ரூ. 13.75 ஆக (தற்போது ரூ. 12.50 ஆக உள்ளது) உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டது.
சில்லரை விற்பனையில், ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 15.25 ஆக (தற்போது ரூ. 14) விற்கப்படும்.












Click it and Unblock the Notifications