தூத்துக்குடி: இலங்கை படகை கடத்திய புலிகள்
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே நடுக்கடலில் இலங்கை மீன் பிடி படகை விடுதலைப் புலிகள் கடத்திச் சென்றனர். இதனை மீட்கும் பணியில் இந்தியகடற்படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் தூத்துக்குடி அருகே 35 கடல் மைல் தொலைவில் வடகிழக்கு பகுதியில் இலங்கை மீன்பிடி படகுஒன்றை கடத்திச் சென்றனர். இந்த கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இலங்கை படகு கடத்தப்பட்ட தகவல் ராமேஸ்வரத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளுக்கு உளவாளி ஒருவர் மூலம் கிடைத்தது. இதையடுத்துசுங்கத்துறை அதிகாரிகள் கடற்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழக கடலோரப் பகுதிகளில் இந்திய கடற்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதுப்பற்றி போலீஸ் அதிகாரிகூறுகையில்,
கடத்தப்பட்ட படகில் 4 மீனவர்கள் இருந்தனர். அவர்களை தப்ப விட்டுவிட்டு படகை மட்டும் விடுதலைப் புலிகள் கடத்திச் சென்றுள்ளனர் என அவர்கூறினார்.












Click it and Unblock the Notifications