சம்மர் ஸ்பெஷல் தீயணைப்பு நிலையங்கள்
சென்னை:கோடை காலத்தில் ஏற்படும் திடீர் தீவிபத்துக்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகரில் 8 புதிய தற்காலிகதீயணைப்பு நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதே சென்னை நகரில் வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளது. இரவு நேரங்களில் புழுக்கமும்உலுக்க ஆரம்பித்து விட்டது.
இந்த நிலையில் கோடை காலத்தின்போது ஏற்படும் தீ விபத்துக்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகரின் முக்கியமானஎட்டு இடங்களில் தற்காலிக தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மயிலாப்பூர் நொச்சிக்குப்பம், மாம்பலம் அன்னை தெரசா நகர், புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம், வியாசர்பாடி, காசிமேடு திடீர் பள்ளம், பெசன்ட் நகர்கடற்கரை, உயர்நீதிமன்றம் அருகே உள்ள அன்னை சத்யா நகர், கீழ்ப்பாக்கம் ஆஸ்ப்ரின் கார்டன் ஆகிய இடங்களில் இந்த தீயணைப்புநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் அதிக அளவில் குடிசைப் பகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தற்காலிக தீயணைப்பு நிலையங்களில், தலா ஒருதீயணைப்பு வண்டி, தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.












Click it and Unblock the Notifications