ஹாயாக கொர்ர்ர் .. தவற விட்டு திரு திரு
சென்னை:செக்ஸ் புகாரில் சிக்கியுள்ள டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ் குமார் தங்களது மகள்களிடமோ, தங்களிடமோ தவறாக நடக்கவில்லை என்றுசுரேஷ்குமாரிடம் டென்னிஸ் பயிற்சி பெற்ற மாணவிகளின் பெற்றோர்கள், காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர்.
சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ்குமார், தன் கண் முன்பாகவே பல பெண்களுடன் தவறான உறவில்ஈடுபட்டதாகவும், குரூப் செக்ஸில் ஈடுபட்டதாகவும், பயிற்சிக்கு வரும் மாணவிகள், அவர்களின் தாயார் ஆகியோருடன் காதல் லீலையில்ஈடுபட்டதாகவும் பரபரப்பு புகாரை எழுப்பினார் சுரேஷின் மனைவி தீபா.
![]() |
தீபா கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்தப் புகார்களை மறுத்த சுரேஷ்குமாரின் சகோதரர்கள்,தீபாதான் பிரான்ஸைச் சேர்ந்த டொமினிக் என்பவரைக் கல்யாணம் செய்து கொள்ள இந்த நாடகம் ஆடுகிறார். அவருக்குத்தான் பல ஆண்களுடன்தொடர்பு உள்ளது என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், சுரேஷ்குமாரிடம் பயிற்சி பெற்ற மாணவிகளின் பெற்றோர்கள் இன்று மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணை சந்தித்து ஒருமனு கொடுத்தனர். மொத்தம் 12 பேர் இந்த மனுவைக் கொடுத்தனர்.
![]() |
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுரேஷ்குமாரை எங்களுக்கு நன்றாகத் தெரியும். கடந்த 15 வருடங்களாக அவரைப் பார்த்துவருகிறோம், பழகி வருகிறோம்.
நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். அவர் மீது தீபா கொடுத்துள்ள புகார் முற்றிலும் தவறானது. யாரிடமும்சுரேஷ் தவறாக நடந்து கொண்டதில்லை.
தீபா கூறியுள்ள புகார்கள் பொய்யானவை என்று அவர்கள் தெரிவித்தனர்.
சுரேஷ்குமாரிடம் பயிற்சி பெற வந்த மாணவிகளை அவர் விட்டதில்லை என்று தீபா உறுதியாக கூறியுள்ள நிலையில், அந்த மாணவிகளின்பெற்றோர்கள் சிலர் இவ்வாறு கூறியிருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications