ஹாயாக கொர்ர்ர் .. தவற விட்டு திரு திரு
சென்னை:டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த கணவனும், மனைவியும், விமான நிலையத்தில் நன்றாக தூங்கியதால், விமானத்தைப் பிடிக்கமுடியாமல் அவதிப்பட்டனர்.
கிருஷ்ணகுமார் என்பவர் தனது மனைவி மஞ்சுவுடன் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். பயணச் சீட்டை வாங்கிக்கொண்டு, காத்திருப்போர் அமரும் இடத்திற்குச் சென்றனர்.
அங்கு இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே நன்றாக தூங்கி விட்டனர். நன்கு குறட்டை விட்டுத் தூங்கிய இருவரும் திடீரென விழித்துப்பார்த்தனர்.
ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்திருந்தது. அவர்கள் போக வேண்டிய விமானம் கிளம்பிப் போயிருந்தது. இதனால் டென்ஷன் ஆன அவர்கள்,விமான நிறுவன அதிகாரிகளுடன், எழுப்பியிருந்தால் நாங்கள் அந்த விமானத்தில் போயிருப்போமே, ஏன் அப்படிச் செய்யவில்லை என்று சண்டைபோட்டனர்.
ஆனால் விமான நிறுவன ஊழியர்களோ, நீங்கள் தூங்கி விட்டால் அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும் என்று பொறுமையாகவிளக்கினர்.
தூங்கப் போய் கடைசியில் விமானத்தைத் தவற விட்ட அந்த தம்பதி அடுத்துக் கிளம்பும் விமானத்தில் செல்வதற்காக மீண்டும் காத்திருக்கத்தொடங்கினர். ஆனால் இம்முறை கண்களை மூடவே இல்லையே!












Click it and Unblock the Notifications