ஈரானிலும் பூகம்பம்: 35 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
தெஹ்ரான்:இந்தோனேசியாவைத் தொடர்ந்து ஈரானில் இன்று பூகம்பம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 35 பேர் காயமடைந்தனர்.
இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 80க்கும் மேற்பட்டோர் உயி>ழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கானோர்வீடுகளை இழந்துள்ளனர்.
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஈரானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
லோர்ஸ்டன் மாகாணத்தில் உள்ள டோரோட் என்ற நகருக்கு அருகே பூகம்பத்தின் மையம் இருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 4.8 ரிக்டராக பதிவாகியிருந்தது.
இந்த பூகம்பத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 35 பேர் பூகம்பத்தில் சிக்கி காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications