ஷியா ஊர்வலத்தில் தாக்குதல்-120 பேர் பலி
பாக்தாத்:ஈராக்கின் ஹில்லா பகுதியில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் நடத்திய ஊர்வலத்தில் நடந்த மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 120 பேர் பரிதாபமாகபலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சதாம் உசேன் கொல்லப்பட்ட பின்னர் ஈராக்கில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தினசரி பலர் குண்டு வீச்சுக்குப் பலியாகி வருகின்றனர்.
ஹில்லா என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான ஷியா முஸ்லீம்கள், கர்பலா நகரை நோக்கி புனித பயணம் தொடங்கினர். ஊர்வலம் போய்க்கொண்டிருந்தபோது திடீரென உள்ளே புகுந்த ஒரு மர்ம நபர், தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளைவெடிக்கச் செய்தார்.
இதேபோல இன்னொரு நபரும் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் 120 பேர் உடல்சிதறி பரிதாபமாக பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது.












Click it and Unblock the Notifications