இலவச நிலம்: 17ம் தேதி 3வது கட்ட விநியோகம்
சென்னை:வந்தவாசியில் வருகிற 17ம் தேதி 3வது கட்ட இலவச நில விநியோகத்தையும், இலவச கேஸ் அடுப்பு விநியோகத்தையும் முதல்வர் கருணாநிதிதொடங்கி வைக்கிறார்.
தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்புத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 30 ஆயிரம் பேருக்கு அடுப்பு வழங்கப்பட்டது. மொத்தம் 3 லட்சத்து 50ஆயிரம் பேருக்கு அடுப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இலவச நிலம் வழங்கும் திட்டமும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக செப்டம்பர் 17ம் தேதி திருவள்ளூ>ல்இலவச நிலம் வழங்கப்பட்டது. 2வது கட்டமாக டிசம்பர் 17ம் தேதி விழுப்புரத்தில் விநியோகத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
மூன்றாவது கட்டமாக வந்தவாசியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதே நிகழ்ச்சியில், 7 ஆயிரம் பேருக்குஇலவச கேஸ் அடுப்புகளும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இரு நிகழ்ச்சிகளிலும் பயனாளிகளுக்கு நிலம் மற்றும் கேஸ் அடுப்பை வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications