நளினி மகள் இந்தியா வர உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியின் மகள் ஆரித்ரா இந்தியா வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது. மேலும் அவர் இந்திய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் அளிக்கவும் அனுமதி அளித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி ஆகியோருக்கு பிறந்தவர்ஆரித்ரா. வேலூர் சிறையில் இவர் பிறந்தார். அதன் பின்னர் இலங்கையில் உள்ள முருகனின் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
தற்போது இலங்கையில் வளர்ந்து வரும் ஆரித்ராவுக்கு இந்திய குடியுரிமை வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும், ஆரித்ரா இந்தியாவில் பிறந்தவர்,எனவே அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு செய்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் தலைமையிலான பெஞ்ச முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆரித்ரா இந்தியக் குடியுரிமை கோரி இதுவரை விண்ணப்பிக்கவில்லை. அப்படி விண்ணப்பித்தால் அதைப்பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆரித்ரா இந்தியாவுக்கு வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. இங்கு வந்த பின்னர் இந்திய பாஸ்போர்ட்கோரி அவர் விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications