மணல் திருட்டு: அரசுக்கு எதிராக பாமக வழக்கு
சென்னை:பாலாற்றில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை விதிமுறைகளுக்குப் புறம்பாக மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி பாமக எம்.எல்.ஏ.இளவழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆற்காடு தொகுதி பாமக எம்.எல்.ஏ. இளவழகன் இன்று உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், வேலூர் மாவட்டம் வாலாஜா,அரக்கோணம், குடிமல்லூர், அத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் பாலாற்றில் மணல் அள்ள பொதுப்பணித்துறை மூலம் அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆனால் விதி.றைகளை மீறி இங்கு அதிக அளவில் மணல் அள்ளுகின்றனர். 2 யூனிட் அள்ளுவதாக கணக்குக் காட்டி விட்டு 7 யூனிட் வரை மணல்எடுக்கிறார்கள்.
3 அடி வரைதான் மணல் அள்ள வேண்டும் என்ற விதிமுறையை மீறி 15 அடி வரை மணல் எடுக்கிறார்கள். இதன் காரணமாக தமிழக அரசுக்கு கடந்த7 மாதங்களில் ரூ. 14 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள்தான் இதற்கு உடந்தையாக உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பரிசீலித்து, இதுதொடர்பாக நேரில்விசாரித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர் கண்ணனை நியமித்தது. வழக்கு விசாரணை 26ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications