கடலில் தத்தளித்த 23 அகதிகள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:நடுக் கடலில் தத்தளித்து வந்த 23 இலங்கை அகதிகளை கடலோரக் காவல் படையினர் படகு மூலம் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

இலங்கையிலிருந்து சமீப காலமாக அதிக அளவிலான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்படும் பலர் படகோட்டிகளால் நடுக் கடலில் உள்ள தீவுகளில் இறக்கி விடப்படுகின்றனர். அங்கிருந்து தமிழகத்திற்கு வரமுடியாமல் பல அகதிகள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து 44 தமிழர்கள் தமிழகத்திற்குக் கிளம்பினர். அவர்களில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர்மட்டும் ராமேஸ்வரம் அருகே உள்ள 2ம் தீடை என்ற தீவில் இறக்கி விடப்பட்டதாக தகவல் கிடைத்தது.

இதுகுறித்துத் தகவலை அறிந்த கடலோரக் காவல் படையினர், ஹோவர் கிராப்ட் படகு மூலம் அங்கு விரைந்தனர். தீடையில் தத்தளித்துக்கொண்டிருந்த 23 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். விசாரணைக்குப் பின்னர் அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+