மணல் திருட்டைத் தடுக்க போன் கேபிள் துண்டிப்பு
திருவள்ளூர்:திருட்டு மணலை ஏற்றி வரும் லாரிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக பி.எஸ்.என்.எல். தொலைபேசி கேபிள்களை துண்டித்து நாசப்படுத்தியதாகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலம் கிராமத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தொடர் கதையாகி உள்ளது. இதைத் தடுக்க பல .றை மக்கள்கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிகிறது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு, லாரிகள் வரும் பாதையில் பெரிய பள்ளம் தோண்டினர்.அப்போது தரைக்குக் கீழே பதிக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல். தொலைபேசி கேபிள் வயர்கள் துண்டிக்கப்பட்டு விட்டன.
இதனால் அப்பகுதியில் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு தொலைபேசிகள் செயல் இழந்தன. இதுதொடர்பாக பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள் போலீஸில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த போலீஸார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 33 பேரை கைது செய்தனர். இதை எதிர்த்து அக்கட்சியினர்போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications