ஒரு வழக்கில் கன்னட பிரசாத்துக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத்துக்கு ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது.
தென் மாநிலங்களில் நடிகைகள், அழகிகளை வைத்து பெரிய அளவில் விபச்சாரத் தொழிலை நடத்தி வந்த கன்னட பிரசாத் தற்போது கைதாகி புழல்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒன்று, காவல்துறை இன்ஸ்பெக்டரை பீர் பாட்டிலால் தாக்கிக் கொலை செய்ய முயன்றவழக்கு.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிரசாத் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்தநீதிபதி பெரியகருப்பையா, பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இருப்பினும் மற்ற வழக்குகளில் பிரசாத்துக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார்.












Click it and Unblock the Notifications