ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாபநாசத்தை அடுத்துள்ள சரபோஜிராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் மேகலை (16). வழுத்தூரில் உள்ள பள்ளியில், 10ம்வகுப்பு படித்து வந்தார்.

கடந்த மாதம் நடந்த தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார் மேகலை. இதனால் ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமிமேகலையை கடிந்துள்ளார்.

ஆசிரியர் திட்டியதால் மேகலை மனம் உடைந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில்அவரை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேகலை இறந்தார்.

மேகலையின் தற்கொலையால் சரபோஜிபுரம் மக்கள் கொந்துளித்து சாலை மறியலில் இறங்கினர். போலீஸார் விரைந்து வந்து அவர்களைசமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

ஆசிரியர் ஆரோக்கியசாமி மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+